Custom Search

28.6.11

இதுக்கும் கட்சி ஆரம்பிச்சுட்டாங்களா?

ந்த ஒரு விஷயத்துக்கு தான் இன்னும் கட்சி ஆரம்பிக்காம இருந்தாங்க...
இப்ப அதுவும் பண்ணிடாங்...
நன்றி: சிரிப்பு வருது

19.6.11

கறுப்பு பண வேட்டை - சுவிஸ் நாட்டு சட்டத்தில் மாற்றம்


வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி ஒப்பந்தங்கள் குறித்த சுவிட்சர்லாந்து சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரிய வரும். யார், யார் எவ்வளவு பணத்தைப் போட்டு வைத்துள்ளனர் என்பதும் அம்பலமாகும்.

இந்தியாவைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் பலர், உள்நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கறுப்புப் பணத்தை, சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்தப் பணத்தின் அளவு, 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, நம்பப்படுகிறது. உலகிலேயே சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.அன்னிய நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் தரப்பிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி, இவர்கள் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.


இதற்கிடையில், சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை பெற, மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. இந்தியாவைப் போல, வேறு பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளதால், அந்த நாடுகளும், தங்கள் நாட்டவர்களின் பெயர், விவரங்களை தர வேண்டும் என, சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன.இப்படி உலக நாடுகள் தரப்பில் நெருக்கடி அதிகரித்ததால், வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி தொடர்பான ஒப்பந்தங்களில், சுவிட்சர்லாந்து அரசு மாற்றம் செய்துள்ளது. அந்த மாற்றங்களுக்கு சுவிட்சர்லாந்து பார்லிமென்டின் மேல்சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதனால், சுவிட்சர்லாந்து நாட்டுடன் இரட்டை வரி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகள் இனி பலன் அடையலாம்.


சுவிஸ் நாட்டில் உள்ள தனியார் வங்கிகளில் தங்கள் நாட்டைச் சேர்ந்த யார், யார் எல்லாம் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளனர், எவ்வளவு டிபாசிட் செய்துள்ளனர் என்ற தகவல்களைப் பெறலாம். கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் சர்வதேச வங்கி கணக்கு எண்கள் மற்றும் சமூக பாதுகாப்பு எண்களைக் கொடுத்து, இவற்றைப் பெறலாம்.இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், இந்தியா, ஜெர்மனி, கனடா, ஜப்பான், நெதர்லாந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும் போலந்து ஆகிய நாடுகள் பயன் பெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவுடனான இரட்டை வரி ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய, சுவிட்சர்லாந்து பார்லிமென்ட் குழு ஒப்புதல் அளித்தது. அதனால், நடப்பாண்டில் இருந்தே சுவிஸ் வங்கிகளில் பணத்தைக் குவித்துள்ளவர்களின் தகவல்களை இந்தியா பெறலாம்.


சுவிட்சர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையால், அந்நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மீட்டுக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் சாதகமாக உள்ளதாகவே தோன்றுகிறது.

15.6.11

கல்யாண கலாட்டா...


கல்யாணம் முடிஞ்சு 6 மாதம்


"என்னமா இத்தனை தொட்டுக்க இருக்கு.. இப்போ போயி ஆம்லெட் போட்டுட்டு  இருக்க, அதுவும் சின்ன வெங்காயம் எல்லாம் போட்டு.. வாம்மா வந்து உக்காரு சேந்து சாப்பிடலாம்.. எவ்வளோ தான் நீ கஷ்டபடுவ.."


"கொஞ்சம் பொறுங்க.. நீங்க தொட்டுக்க ஆம்லெட் இல்லேன்னா சரியா சாப்பிடமாட்டீங்க.. அதுவும் சின்ன வெங்காயம் போட்டாதான் டேஸ்ட் நல்ல இருக்கும்னு சொல்லுவீங்க... அதுக்குதான்"


கல்யாணம் முடிஞ்சு 1 வருடம்


"என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல் "


"சாம்பார்,பெரிய வெங்காயம் போட்டு ஆம்லெட்"


"அவ்வளோதானா"


"முடியலைங்க"


கல்யாணம் முடிஞ்சு 1 1 /2 வருடம்


"என்னம்மா இன்னைக்கு சாப்பிடலாமா "


"இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க, கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு குடுங்க ஆம்லெட் போடறேன் "


கல்யாணம் முடிஞ்சு 2 வருடம்
"என்னம்மா வெங்காயம் இல்லாம ஆம்லெட் போட்டு இருக்க. எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல"


" ஒரு நாள் இதை சாப்பிட்டா என்ன... எல்லாத்தையும் நானே செய்யணுமா"

கல்யாணம் முடிஞ்சு 3 வருடம்


"என்னம்மா இத்துநூன்டு இருக்கு, கலக்க கூட இல்ல, அப்படியே உடைச்சு புல்பாயிலா ஊத்தி இருக்க.."


" முட்டை என்ன நானா போடுறேன். கோழி போட்டது சின்னதா இருக்கு , நான் என்ன செய்ய. சும்மா குறை சொல்லிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க"


கல்யாணம் முடிஞ்சு 5 வருடம்

"என்ன ஆப்பாயில் போட்டு இருக்க. எனக்கு புடிக்காது தெரியும்ல"


"ஒருநாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊர்ல இல்லாத அதிசய புருஷன் எனக்கு வந்து வாச்சிருக்கு...


கல்யாணம் முடிஞ்சு 7 வருடம்


"என்னம்மா இன்னைக்கும் ஒன்னும் செய்யலியா "


"சாதம் வடிசுருக்கேன். FRIDGE -ல நேத்தைய கொழம்பு இருக்கு. முட்டையும் இருக்கு. ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க"


கல்யாணம் முடிஞ்சு 10 வருடம் அதற்கு மேலே...


"என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யணும் "


"அதையும் நான் தான் சொல்லனுமா. எனக்கு என்ன பிடிக்கும்னு எங்களுக்கு தெரியாதா...  அதை செய்யுங்க"

10.6.11

போரிஸ்கா: செவ்வாய்கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தினால்...

பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை "அம்மா" என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?
வழக்கமாக நம் மூளையில் பதியப்பட்ட தகவல்களின்படி "இல்லை" என்பதே நம் பதிலாக இருக்கும். ஆனால் இதெல்லாம் நடந்தது உண்மை தான் என்று சொல்கிறார்கள் போரிஸ்காவின் பெற்றோர்.
சிலருக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வரும். அந்த மாதிரி இந்த பையனுக்கு பூர்வ ஜென்ம வாசனை வந்து, நான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த பையன் என்று கூறி அதன் பிறகு விஞ்ஞான உலகையே அவனது தகவல்களால் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறான்.

யார் இந்த போரிஸ்கா: ரஷ்யாவில் சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 15 வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு.
இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர்.
இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே தானாக பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.
சில நேரங்களில் சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ்.
தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும், இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான். மேலும் செவ்வாய் கிரக வாசியாக இருந்த போது பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான்.
லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்த போது ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ் லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான். இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால் எல்லாம் நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான்.
பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ் மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சியளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில் உள்ளது போலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.
போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இத்தகைய தன்மையுடையோரை "இண்டிகா குழந்தைகள்" என்றும் அழைக்கின்றனர்.
மாறிவரும் பூமியின் காந்தப் புலனானது 2009 மற்றும் 2012 காலகட்டங்களில் மிகப் பெரும் இரண்டு அழிவுகளை ஏற்படுத்தும் என்று போரிஸ் கூறுகிறான்.
செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங்களின் வீரியம் காரணமாக தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை என்றும், பாதுகாப்பான கவச அறைகளில் அவர்கள் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ் அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்பவர்கள் என்றும் கூறுகிறான்.
பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான். விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப் பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான்.
இவனை வியப்புடன் நோக்கும் விஞ்ஞான உலகம், விஞ்ஞான பேராசிரியர்களே சரளமாக உரையாடுவதில் உள்ள சிக்கல்கள் இவனுக்கு இல்லை எனத் தெரிவிக்கிறது.
போரிஸ்காவைப் பொறுத்தவரை,"கள்ளங்கபடமில்லாத அன்பும், எதையும் மன்னிக்கும் தயாள குணமுமே மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி என்றும், இதைத் தாண்டிய எந்தவொரு விஷயமும் மனித குல அழிவிற்கு வழிவகுக்கும்" என்கிறான்.
போரிஸ்காவின் கூற்றுகளின் படி நாம் வாழும் இப்பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஆயத்தமாகி வருவது போலத் தெரிகிறது.

7.6.11

இந்திய சுதந்திரம் அடைய காரணம்?...

இந்திய சுதந்திரம் அடைய பலர் போராட்டம் காரணமாக இருந்தாலும், இறுதியில் லார்டு மவுண்ட்பேட்டன் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு இந்திய சுதந்தரத்திற்கு பரிந்துறைத்தார்.

அதற்கு காரணம்.....

2.6.11

மற்றுமொரு மெகா ஊழல்... - தயாநிதி மாறனின் 323 தொலைபேசி இணைப்புகள்


நன்றி : தினமணி

இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது.

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன.

2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களை 97;ிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும். டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.


இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும். இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இத;ன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது


சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை. இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை.

அதிகம் விரும்பப்பட்ட பதிவுகள்